ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
'கங்குவா' படத்தையடுத்து நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் 'சூர்யா 45' படத்திற்கான படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பு கருவிகளுடன் படக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த அதிகாரிகள் தடை விதித்து, படப்பிடிப்பு கருவிகள் திருப்பி அனுப்பினர். மேலும், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.