'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கேம் சேஞ்ஜர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவற தோல்வி படமாக அமைந்துவிட்டது. நான்கு வருடமாக இந்த படத்தை பார்த்து பார்த்து இயக்குனர் ஷங்கர் செதுக்கி வந்தார். ஆனாலும் இந்தியன் 2வை போல இந்த படமும் அவருக்கு கை கொடுக்க தவறிவிட்டது.
அது மட்டுமல்ல இந்த படம் வெளியான மறுநாளே பைரசி நபர்களால் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் இந்த படத்தை முறையான அனுமதி இன்றி திருட்டுத்தனமாக ஒளிபரப்பி உள்ளனர். இப்படி லோக்கல் சேனலிலேயே இந்த படத்தை ஒளிபரப்பிய நிகழ்வு தெலுங்கு திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காப்பி ரைட் பாதுகாப்பு உரிமை துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் என இரு தரப்பினரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள். இதில் அப்பள ராஜு என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்த சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.




