'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‛கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் சிறிது நேரம் காண்பித்தனர். தற்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
இது குறித்து படை தலைவன் பட இயக்குனர் அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைத்துள்ளோம். அவரது கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் என்ற படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வச்ச தங்ககுடம் என்ற பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். இந்த பாடலை லப்பர் பந்து படத்திலும் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே நாங்கள் இந்த பாடலை வைத்து விட்டோம். எங்கள் படம் திரைக்கு வர தாமதம் ஆகிவிட்டது. குறிப்பாக விஜயகாந்த்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் படை தலைவன் படத்தில் இடம் பெற்றுள்ளது'' என்கிறார்.