நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நடிகர் தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்து விட்டாலும் அவரது ஐம்பதாவது படமாக உருவான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து வெளியிட்டார். படமும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் அந்த வகையில் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன். இவர் வேறு யாரும் அல்ல தனுஷின் சகோதரி கார்த்திகா தேவியின் கணவர். பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான இவரை ஒரு நடிகராக மாற்றிய தனது சகோதரர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கார்த்திகா தேவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னிடமிருந்த இந்த புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஒரு வருடமாக நான் காத்திருந்தேன். ஒரு இதய சிகிச்சை மருத்துவராக டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயாவின் திறமைகள் நன்கு தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என தனுஷ் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் தனது ஐம்பதாவது படத்தில் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி நடிக்க அழைத்தபோதும் எனக்கு வியப்பாக இருந்தது.
தனுஷ் மற்ற நடிகர்களை படப்பிடிப்பு தளத்தில் வேலை வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் எனது கணவரையும் ஒரு நடிகராக மாற்றியதை பார்த்து பிரமித்து விட்டேன். படத்தில் எனது கணவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். தனுஷ் இயக்கிய அதுவும் அவரது ஐம்பதாவது படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்காக தனுஷிற்கு நன்றி சொல்வதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு சகோதரியாகவும் மனைவியாகவும் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.