ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. 30க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கும், அவருடைய முதல் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் பிறந்தவர் தெலுங்கு நடிகர் நரேஷ். விஜய நிர்மலா பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். கிருஷ்ணாவிற்கு அதற்கு முன்பாகவே இந்திரா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்களது மகன்தான் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு.
விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் திரையுலகத்தில் அறிமுகமாகி 50 வருடங்களாகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் என்ற விதத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். நரேஷ் நான்கவதாக திருமணம் செய்து கொண்டவர் கன்னட நடிகை பவித்ர லோகேஷ்.
திரையுலகில் தன்னுடைய 50வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் சில்கூர் என்ற கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார். அதில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை பூனம் தில்லான், தமிழ் நடிகைகள் ஜெயப்பிரதா, மேனகா, சுஹாசினி, குஷ்பு மற்றும் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதோடு “விஜயகிருஷ்ணா மந்திர் மற்றும் கட்டமனேனி இந்திரா தேவி ஸ்பூர்த்தி வனம்” என்ற பூங்காவையும் திறந்தார் நரேஷ். அந்தப் பூங்காவில் நடிகர் கிருஷ்ணா பற்றிய திரைப்பட நூலகம், மியூசியம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.