சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நகராட்சி திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்று தன்னை ஏமாற்றி ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று ரவீந்தர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் வாழும் அசோக் நகர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆணங்களின் அடிப்படையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.