தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கன்னட திரை உலகை பரபரப்பாகியுள்ளது. தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தேவையில்லாத டார்ச்சர் கொடுத்தார் என்பதால் சிலரின் உதவியுடன் நடிகர் தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறியுள்ள போலீசார், தர்ஷனுடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேருக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். தர்ஷனின் கைது குறித்து கன்னட திரையுலகில் உள்ள உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் நடிகை ரம்யா உள்ளிட்டோர் கூறும்போது, ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. நியாயம் கிடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இவர் தர்ஷனுடன் இணைந்து அர்ஜூன் மற்றும் அக்ரஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “நான் தர்ஷனுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளேன். ஒரு நபர் ஏற்கனவே ஓரிருமுறை சில சர்ச்சையான நிகழ்வுகளில் சிக்கியதை வைத்து அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடப்பது தான். இந்த வழக்கில் தர்ஷன் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவரை நீங்களாகவே குற்றவாளி என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்த ஆதரவு குரல் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.