பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

கன்னட நடிகரான தர்ஷன், அவரது காதலியான பவித்ரா கவுடா உடன் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து மேலும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதாகியுள்ள தர்ஷன் போலீஸ் விசாரணைக்காக அன்னபூர்னேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் உள்ளார். அங்கு வந்து தர்ஷனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர் திரண்டு வந்து கோஷம் போட்டுள்ளனர். அதனால், அந்த காவல் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ரேணுகா சுவாமி உடலை எடுத்துச் சென்றதாக கருதப்படும் வாகனங்கள் பற்றிய வீடியோவை சிசிடிவி மூலம் போலீசார் கைப்பற்றி உள்ளார்களாம். இந்த கொலை வழக்கில் பவித்ரா கவுடா நம்பர் 1 குற்றவாளியாகவும், தர்ஷன் நம்பர் 2 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.