கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
டிரைலரைப் பார்த்ததுமே எத்தனை ஹாலிவுட் படங்களின் காப்பி இது என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களிடம் நிச்சயம் எழுந்திருக்கும். படங்களின் காப்பியா இல்லையா என்பது தெரியாது, ஆனால், சிலரது உழைப்பை படக்குழு காப்பி அடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்கொரிய ஓவியக் கலைஞரான சுங் சோய் என்பவர் அவரது சமூக வலைத்தளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் வரைந்த ஒரு ஓவியத்தையும், 'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்றையும் பதிவிட்டு, “கலைப் படைப்புகளை அனுமதி வாங்காமல் பயன்படுத்துவது ஒரு மோசமான நடைமுறை. இந்த சட்டமற்ற சூழலில் இப்படியாக செய்வதை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலிவெர் பெக் என்ற 'கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட்' , இது போன்ற மற்றொரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். “ஸ்டார் டிரெக்'கிற்காக நான் செய்த சில வேலைகளை வைஜெயந்தி மூவீஸ் குழு திருடியுள்ளது என நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு திறமைசாலியான சுங் சோய் ஓவியத்தை நேரடியாகத் திருடியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற காப்பி புகார்கள் பற்றி 'கல்கி 2898 எடி' குழு மீது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.