லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கன்னட நடிகரான தர்ஷன், அவரது காதலியான பவித்ரா கவுடா உடன் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து மேலும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதாகியுள்ள தர்ஷன் போலீஸ் விசாரணைக்காக அன்னபூர்னேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் உள்ளார். அங்கு வந்து தர்ஷனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர் திரண்டு வந்து கோஷம் போட்டுள்ளனர். அதனால், அந்த காவல் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ரேணுகா சுவாமி உடலை எடுத்துச் சென்றதாக கருதப்படும் வாகனங்கள் பற்றிய வீடியோவை சிசிடிவி மூலம் போலீசார் கைப்பற்றி உள்ளார்களாம். இந்த கொலை வழக்கில் பவித்ரா கவுடா நம்பர் 1 குற்றவாளியாகவும், தர்ஷன் நம்பர் 2 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.