விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை வீழ்த்தி, 52.9 சதவீத ஓட்டுகளுடன் முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், டில்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், இதனால் பெண் காவலாளி கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா ரணாவத்தை அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.