தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த மாதிரியான எதிர்மறை சிந்தனைகள் எனக்கு கிடையாது.
உலக நாடுகள் முழுக்க போர் நடக்கிறது. ஆனால் இந்தியா அமைதியாக இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா? சிலர் தவறு செய்திருக்கலாம். அதனால் எந்த ஆட்சியையும் தவறு சொல்ல முடியாது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவது தொடர்பான யோசனை இப்போதைக்கு இல்லை. எனது வேலையைப் பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. என்றார்.