‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் கார்த்திக் என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. புதுமண தம்பதிகளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ரோபோ சங்கர் அதுகுறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியபோது, 'கேப்டனை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வந்திருக்கிறோம்.
திருமணத்திற்கு பிறகு என் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு குலசாமியை பார்த்ததும் நேராக கேப்டனை தான் பார்க்க வந்துள்ளோம். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, விஜயகாந்தை போல் இன்னொருவர் வர முடியாது. கேப்டன் எங்களுக்கு குலசாமி. அதனால் அவரை பார்க்க இங்க வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பளித்த அண்ணியாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.