‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் |
உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன்.
மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, தனது மெழுகுச்சிலையுடன், புகைப்படம் எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுன் அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதில் யார் அல்லு அர்ஜுன், எது மெழுகுசிலை என எளிதில் தெரிந்து கொள்ளாத முடியாதபடி அந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஒவ்வொரு நடிகருக்கும் இது ஒரு மைல்கல் தருணம்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.