Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்!

19 மார், 2024 - 05:41 IST
எழுத்தின் அளவு:
Rajamouli's-son-is-making-two-films-with-Fahadh-Faasil-at-the-same-time!

மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள மொழி படங்களில் கதாநாயகனாக நடிப்பதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தனது ஆர்கா மீடியாஸ் நிறுவனத்தின் மூலம் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக அறிமுக இயக்குனர் ஷாசாங் எல்டி இயக்கத்தில் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' என்கிற படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருட ஜூன் மாதத்தில் தொடங்குகிறது; 2025ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வருகிறது.

மற்றொரு படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த்தா நடிலா இயக்கும் 'ஆக்சிசன்' என்கிற படத்திலும் கதாநாயகனாக பஹத் பாசில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருடத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்களையும் ராஜமவுலி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சுபெண்களால் முடியாதது எதுவுமில்லை! ... கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? கேம் சேஞ்சர் படத்தில் மூன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)