அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களை முடித்த கையோடு நடிகர் பிரபாஸ் கொஞ்ச நாள் ஓய்வெடுக்க விரும்பி சினிமாவை விட்டு ஒதுங்கி வெளிநாடுகளில் தங்கியிருந்தார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார் பிரபாஸ்.
இத்தாலியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். சயின்ஸ் பிக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.