ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து 'குஷி' படத்தை தமிழில் விஜய்யை வைத்தும், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும் இயக்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தார்.
கடந்த சில வருடங்களாக மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஆக எஸ்.ஜே.சூர்யா களமிறங்க உள்ளார். 'கில்லர்' என்கிற த்ரில்லர் படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கவுள்ளார் . இதில் கார் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற உள்ளதால் இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.