ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இது என்ன மாயம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பவானிஸ்ரீ, க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படத்தில் நடித்தார். 'விடுதலை' படத்தில் தமிழரசி கேரக்டர் மூலம் புகழ்பெற்றார். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்து நன்றாக பெயர் எடுத்து விட்டதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்று நினைத்தார். ஆனால் அவரை தேடி வந்த வாய்ப்புகள் அவருக்கு திருப்தி தரும் கதைகளாக அமையவில்லை. இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.