வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படம் 'சலார்'. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் மிகக் குறைவான வசனங்களே பேசியிருக்கிறார் என ஒரு ரசிகர் படம் வெளிவந்த போதே குறிப்பிட்டிருந்தார். “சலார்' படத்தில் பிரபாஸ் 100 முதல் 110 வரிகள் அதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் வசனமே பேசியிருக்கிறார். தோராயமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே அந்த வசனங்கள் இருக்கும்,”.
ஓடிடியில் வந்த பிறகு அதே ரசிகர் பிரபாஸ் பேசிய வசனங்களை எடிட் செய்து ஒரு வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். “சலார்' படத்தில் பிரபாஸ் பேசிய வசனங்கள் தோராயமாக 4 நிமிடங்கள் மட்டுமே சில இடைவெளிகளுடன் வருகிறது. இடைவெளியில்லாமல் 2 நிமிடம் 35 வினாடிகள் இருக்கிறது,” என கணக்கிட்டு சொல்லியிருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் பாகத்திலாவது இரண்டு பக்கங்களுக்கு மேல் வசனம் பேசுவாரா பிரபாஸ் ?.