கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 'சென்னையில் அயோத்தி' எனும் நிகழ்ச்சி நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது : சரித்திரத்தில் இது முதல் நிகழ்வு. தமிழ்நாட்டில் அல்ல, வட இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க முதன்முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அது இந்த நாள்தான். அது சரித்திரத்தில் என்றும் அழியா புகழை நமது இந்த காரியத்தை நல்லபடியாக முடித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இது யாரால் முடியும்? எல்லோரும் செய்ய முடியுமா? முடியவே முடியாது. அவருக்கு பகவான் எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்? யார் யார் என்ன செய்தார்கள்? எது சரித்திரத்தில் நிற்கிறது என்று கணக்கு பார்க்க வேண்டும். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள்.
பிரதமர் மோடி செய்த இந்த காரியம் இருக்கிறதே, என்னால் சொல்ல முடியவில்லை. சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு பெரும் மன நிறைவை தருகிறது. அதேநேரத்தில் இந்தவேளை அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இங்கே நின்றுகொண்டிருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.