தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் |

நடிகை த்ரிஷா பற்றி பேட்டி ஒன்றில் ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூரலிகானுக்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி கூட நேற்று அவரது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தெலுங்கு ஹீரோவான அவரே தெரிவித்த பின்பும் இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் அது பற்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
'லியோ' படத்தின் கதாநாயகனாக விஜய், மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரும் இதுவரை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை. இவர்கள் அனைவருடனும் த்ரிஷா இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நடிகர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுவிட்டதால் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்று மன்சூரலிகான் அளித்த பேட்டியில் கூட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உத்தரவுப்படி தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்த பின்பும் தமிழின் முன்னணி நடிகர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




