ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
2000-ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் சென்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு குத்து, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா அளித்த பேட்டியில், ‛‛இந்த தேசிய விருது நான் இசையமைத்துள்ள கருவறை என்ற குறும்படத்திற்காக கிடைத்திருக்கிறது. இந்திய ஜனாதிபதி கையில் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தை தேவாவுக்கு அர்ப்பணிக்கிறேன். என் அப்பா ஏராளமான விருதுகள் வாங்கி இருக்கிறார். என்றாலும் நான் வாங்கியுள்ள இந்த விருதை அவர் சிறப்பாக நினைப்பார். மேலும், இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளாக நான் இசையமைத்த எத்தனையோ படங்கள் என்னுடைய பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. அப்போது விருது கிடைத்ததில்லை. ஆனால் இந்த படத்துக்கு இசையமைக்கும்போது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் விருது கிடைத்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.