படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த சில வருடங்களில் யூடியூப்பில் அவரது படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பாலிவுட்டிலும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது.
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் இன்னொரு சிறப்பம்சமாக அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை சமீபத்தில் சிலை வடிவமைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறியுள்ளார்.