டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் சூர்யாவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பெயரை பெற்று தந்தன. அதுவும் ஓடிடியில் தான் வெளியானது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சிவா இயக்கத்தில் ' கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, ‛‛ரசிகர்களிடம் தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படம் நாம் நினைத்தது விட 100 மடங்கு நன்றாக வந்துள்ளது. சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. மேலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் . இது அல்லாமல் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக உருவாக்க லோகேஷ் கதை ஒன்றை கூறியுள்ளார். விரைவில் அது படமாகும். இதற்கு பிறகுதான் இரும்பு கை மாயாவி லோகேஷ் இயக்கத்தில் உருவாகும்" என தனது அடுத்த பட அப்டேட்களை கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சூர்யா .




