பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தொடர்ந்து ஹீரோவாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரும் நடிகர் வெங்கடேஷும் இணைந்து நடித்த ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி 'மாயா பஜார் பார் சேல்' என்கிற வெப்சீரிஸை தயாரித்துள்ளார்.
கவுதமி சல்குல்லா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் நவ்தீப், நரேஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், திடீரென அரசாங்கம் அந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதியுடன் கட்டப்படவில்லை என கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சிப்பதால் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்த வெப் சீரிஸின் முழுக்கதை. வரும் ஜூலை 14-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.