'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தொடர்ந்து ஹீரோவாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரும் நடிகர் வெங்கடேஷும் இணைந்து நடித்த ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி 'மாயா பஜார் பார் சேல்' என்கிற வெப்சீரிஸை தயாரித்துள்ளார்.
கவுதமி சல்குல்லா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் நவ்தீப், நரேஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், திடீரென அரசாங்கம் அந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதியுடன் கட்டப்படவில்லை என கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சிப்பதால் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்த வெப் சீரிஸின் முழுக்கதை. வரும் ஜூலை 14-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.




