ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே அவருக்கு அடுத்ததாக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை என்றால் அது கிர்த்தி ஷெட்டி தான். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்து வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் கிர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் சில தினங்களாக கிர்த்தி ஷெட்டியை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடன் கம்பெனி கொடுக்க வேண்டும் என துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது கிர்த்தி ஷெட்டியே இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வெளியானபோதே பார்த்தேன்.. தானாகவே அது அமுங்கி போய்விடும் என்று நினைத்தால் அது பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இந்த பதிவை இட்டுள்ளேன். அதில் சொல்லப்பட்ட செய்திகள் எதுவுமே உண்மை இல்லை.. எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்” என்று கூறியுள்ளார் கிர்த்தி ஷெட்டி.