படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தெலுங்கில் மகேஷ்பாபுவின் புதிய படமான குண்டூர் காரம் படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இடையில் மகேஷ்பாபுவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில துக்கமான நிகழ்வுகளால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் அடிக்கடி தள்ளிப்போனது. இதனால் ஏற்பட்ட கால்சீட் குளறுபடி காரணமாக தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர் மட்டுமல்ல இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் கூட சில காரணங்களால் விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக நடிகை சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் நுழைந்த சம்யுக்தா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடித்த சார் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான விருபாக்சா ஆகிய படங்கள் மூலம் கவனிக்கத்தக்க நடிகையாக மாறியுள்ளார். இந்த நிலையில் தான் மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது