ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

சென்னை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த மூன்று வருடங்களாக கொரானோ தாக்கத்தால் சென்னையில் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தோனி கலந்து கொள்ளும் கடைசி பிரிமியர் கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் சென்னையில், சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வயது வித்தியாசம் இன்றி வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் நேற்று சென்னை வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
சினிமா பிரபலங்களிடமும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு உண்டு. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியை தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.