காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

அஜித்தை பொறுத்தவரை திரையுலகைச் சேர்ந்த எந்த விதமான விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். அதேசமயம் தனது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் பயணம் தவிர, தனது குழந்தைகள் சம்பந்தமான நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சி என செலக்டிவான சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னை ரசிகர்களுடன் எந்த தயக்கமுமின்றி புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை அவரை ஒரு ரசிகராக எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நீண்ட நாளைக்கு பிறகு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு மனதில் போற்றி பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். சோஷியல் மீடியாவில் எப்போதுமே அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பதால் இருதரப்பு ரசிகர்களும் இந்த சந்திப்பை வரவேற்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




