காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேசமயம் அந்த படம் அதிக நேரம் ஓடும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதை அந்தப்படத்துடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எப்போது என பல நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ராஜமவுலி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, இதைப்பற்றி என்னால் இப்போது எந்த தகவலும் சொல்ல முடியாது. என்னைவிட இந்த படத்தின் கதாசிரியரான எனது தந்தை விஜயேந்திர பிரசாத் சொன்னால் தான் சரியாக இருக்கும். அவர் தான் தற்போது அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் தற்போது கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஒரு வழியாக இந்த இரண்டாம் பாகத்திற்கான கதைக்களத்தை பிடித்து விட்டோம் என்று கூறியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற தகவலுடன் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.




