எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
சிம்பு நடித்த ‛ஈஸ்வரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவி உடன் பூமி படத்தில் நடித்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக கலகத் தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நவ., 18ல் இந்த படம் திரைக்கு வருகிறது.
நித்தி அகர்வால் தினமலருக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛என்னைப்பற்றி சர்ச்சையான செய்திகள் வந்தால் இரண்டு பேரிடம் மட்டும் தான் நான் தெளிவுப்படுத்த வேண்டும். அது எனது அப்பா, அம்மா மட்டுமே. அதற்குமேல் அதை பெரிதாக எடுக்க மாட்டேன். ஆரம்பத்தில் இதுபோன்ற சர்ச்சையான செய்திகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின்னர் அது பழகிவிட்டது'' என்கிறார்.