காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சிம்பு நடித்த ‛ஈஸ்வரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவி உடன் பூமி படத்தில் நடித்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக கலகத் தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நவ., 18ல் இந்த படம் திரைக்கு வருகிறது.
நித்தி அகர்வால் தினமலருக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛என்னைப்பற்றி சர்ச்சையான செய்திகள் வந்தால் இரண்டு பேரிடம் மட்டும் தான் நான் தெளிவுப்படுத்த வேண்டும். அது எனது அப்பா, அம்மா மட்டுமே. அதற்குமேல் அதை பெரிதாக எடுக்க மாட்டேன். ஆரம்பத்தில் இதுபோன்ற சர்ச்சையான செய்திகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின்னர் அது பழகிவிட்டது'' என்கிறார்.




