'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக திரையுலகில் அடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி இசையமைத்து வந்த இவர், ஒருகட்டத்தில் பாலிவுட் சென்ற பின்னர் இந்திய அளவில் பிரபலமாகி அங்கேயே தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் அவரது இசையமைப்பில் தமிழில் வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியானால் அதுவே ஆச்சரியம் என்கிற நிலை தான் கடந்த வருடம் வரை இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான நான்கு தமிழ் படங்கள் கடந்த இரண்டு மாதங்களில் வெளியாகி உள்ளன. அதிலும் ஜூலையில் வெளியான பார்த்திபன் நடித்த இரவின் நிழல் படத்தை தவிர்த்து பார்த்தால், ஆகஸ்ட் 31ல் வெளியான கோப்ரா, செப்டம்பர் 15ல் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் உட்பட முப்பது நாட்களுக்குள் 15 நாட்கள் இடைவெளியில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் இசையமைத்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது என்பது அவரது இசை பயணத்தில் இதுவரை நிகழ்த்திராத சாதனை என்றே சொல்லலாம்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவரது இசையமைப்பில் மாரி செல்வராஜ் உதயநிதி கூட்டணியில் மாமன்னன் என்கிற படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




