ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் முடிவுரையை எழுதிவிட்டார்கள் ரசிகர்கள். படத்தின் இயக்குனர் பூரி ஸ்கிரிப்ட்டை ஒழுங்காக எழுதாததே அதற்குக் காரணம்.
முதல் நாளிலேயே படம் அடி வாங்கியதால், படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், நஷ்ட ஈடு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி கவுரிடம் பேசியதாகவும், ஆனால், அவர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொன்னார்கள். அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடமும் முறையிடும் வேலைகளும் நடந்தன. அவரை சந்திக்க மறுத்தால் தெலுங்கு பிலிம் சேம்பரிடம் புகார் அளிக்கப் போவதாக வினியோகஸ்தர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. நேற்று முதல் வினியோகஸ்தர்களுக்கு ஏரியா வாரியாக நஷ்டத் தொகையை வழங்கி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'ஆச்சார்யா' படத்தின் படுதோல்விக்குப் பிறகு இப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. அதற்கடுத்து 'லைகர்' படத்திற்கு வழங்கப்படுகிறது.