‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவின் அபூர்வமான நடிகைகளில் ஒருவர் அதிதி பாலன். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் அருவி படத்தின் மூலம் நடிகை ஆனார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன்பிறகு பிசியான நடிகை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார். அதன்பிறகு அவர் கோல்ட் கேஸ் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் அவர் நடித்தார். இப்போது படவேட்டு என்ற தமிழ் படத்திலும், சமந்தா நடிக்கும் தெலுங்கு படமான சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அதிதி பாலன் திடீரென மண்பாண்ட கலைஞர் ஆகியிருக்கிறார். மண்பாண்டம் செய்வது போன்ற படத்தை வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: மண்பாண்டம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும், அதை முறைப்படி கற்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் முதல் அடியை இப்போது எடுத்து வைத்திருக்கிறேன். மண்பாண்ட கலைஞர் ரஞ்சிதா எனக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
மண்பாண்டம் செய்வது வெறும் கலையோ, தொழிலோ அல்ல. அது மனம் சம்பந்தப்பட்டது. அதில் களிமண் மட்டுமல்ல மனதும் இருக்கிறது. ஆழ்ந்த மனநிலையும், விழிப்புணர்வும் கொண்டவர்களால் மட்டுமே மண்பாண்ட கலை செய்ய முடியும். உடலுக்கும், மனசுக்கும் உற்சாகம் தரும் கலை மண்பாண்ட கலை. என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




