'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நம் நாடு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(ஆக.,13) முதல் வீடு தோறும் மூன்று தினங்களுக்கு வீட்டில் கொடியேற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கும்படி கேட்டிருந்தார் பிரதமர். திரையுலகினர் பலரும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் ரஜினி, பிரசன்னா, செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட வெகுசிலரே தங்களின் சமூகவலைதள முகப்பு போட்டோவை மாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளரும், சமீபத்தில் ராஜ்சபா எம்பியாகவும் பொறுப்பேற்ற இளையராஜாவும் சமூகவலைதளத்தில் தனது முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார்.




