ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் நரேஷ். இவர் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னாள் கதாநாயகனாக நடிகர் கிருஷ்ணாவின் மகன், மகேஷ்பாபுவின் அண்ணன். நரேஷ் ஏற்கெனவே மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.
நான்காவதாக கன்னட குணச்சித்திர நடிகை பவித்ரா லோகேஷைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. இதையடுத்து நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா, மைசூரில் தங்கியிருந்த நடிகை பவித்ராவிடம் சென்று தகராறு செய்திருக்கிறார். அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
நரேஷ், பவித்ரா திருமணம் நடந்துவிட்டது என ரம்யா குற்றம் சாட்டியுள்ளார். நரேஷ் ஏற்கெனவே ரம்யாவை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நிலையில், ரம்யா தான் இன்னும் நரேஷின் மனைவிதான் என்று கூறி வருகிறார்.
இதனிடையே, பவித்ரா லோகேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ரம்யாவின் குற்றச்சாட்டுக்களை நம்ப வேண்டாம் என்றும், தானும் நரேஷும் கணவன் மனைவி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மைசூரு போலீசிடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவித்ரா லோகேஷ் சமீபத்தில் வெளிவந்த 'வீட்ல விசேஷம்' படத்தில் படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தார். நிறைய தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.