சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
துல்கர் சல்மான், அதிதிராவ், காஜல் அகர்வால் நடித்த ஹேய் சினாமிகா படத்தை இயக்கிய நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் அடுத்து தூத்துக்குடியை கதை களமாக கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இதற்கு தக்ஸ் என்று பெயரிட்டுள்ளார். கூட்டாக கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறவர்களை தக்ஸ் என்று அழைப்பாளர்கள். அதனையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிருந்தா.
இந்த படத்தில் மும்பைகார் எனும் ஹிந்தி படத்தில் நடித்த ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், அனஸ்வரா ராஜன் , ரம்யா சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தூத்துக்குடியை சேர்ந்த சில மண்ணின் மைந்தர்கள் நடிக்கிறார்கள். காரணம் கதையின் களம் தூத்துக்குடி.
பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். தமிழுடன் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.