படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தில் அனிருத் இசையில் அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைக் காட்டிலும் அப்படத்தில் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்கள் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டன.
படத்தின் முதல் அறிவிப்பு வீடியோவின் போதே 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'விக்ரம்' படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற 'விக்ரம்….விக்ரம்…' பாடலைப் பயன்படுத்தினார்கள். கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் இடைவேளையின் போதும் அப்பாடல்தான் பின்னணியில் ஒலித்தது.
அது மட்டுமல்லாமல் படத்தின் ஆரம்பக் காட்சியில் குடித்துவிட்டு காரில் கமல்ஹாசன் சென்று கொண்டிருக்கும் போது அவரது காலில், 'சக்கு…சக்கு…வத்திக்குச்சி…' என்ற பாடல் ஒலிக்கும். அது எந்த படத்தின் பாடல் என ரசிகர்கள் தேடிப் பிடித்து டிரென்ட் ஆக்கி வருகிறார்கள்.

அப்பாடல் 1995ம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில், ஆதித்யன் இசையமைப்பில், அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அசுரன்' படத்தில் இடம் பெற்ற பாடல். அப்பாடலை பிறைசூடன் எழுத ஆதித்யன், சுஜாதா பாடியிருந்தனர். அப்பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண், மன்சூரலிகான், ரோஜா ஆகியோர் நடனமாடியிருப்பார்கள். அன்றைய கால கட்டத்திலேயே மிகவும் ஹிட்டான பாடல் அது.
'விக்ரம்' படம் மூலம் மீண்டும் பேசப்படும் அப்பாடலை மேலும் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அது குறித்து அவர் கூறுகையில், “ஆதித்யன் இசையமைப்பில் என்னால் புரோக்ராம் செய்யப்பட்ட பெப்பியான வின்டேஜ் பாடல் இப்போது வைரலாகி வருவது மகிழ்ச்சி. அப்பாடல் 1995ம் ஆண்டு விஜிபி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்ட பாடல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
காலம் கடந்தும் இப்படி சில பாடல்கள் பேசப்படுவது அந்தப் பாடலை உருவாக்கியவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.