ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை ராம் இயக்கி வருகிறார். அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ்கோடி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு இப்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மற்ற பணிகள் விரைவில் துவங்குகின்றன. தமிழ், மலையாளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதுபற்றி சூரி கூறுகையில், ‛‛இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன்னுடைய ரயில் பயணங்கள் மறக்க முடியாத நிகழ்களாக இருக்கும். அதுபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது. பிரியா விடை பெறுகிறேன்'' என்றார்.




