ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னணியில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார் சூரி. அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛என்னுடைய இந்த வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் பண விவகாரத்தில் நம்பி ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கில் முதலில் அடையாறு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. திருப்திகரமாக விசாரணை நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். அதையடுத்து தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடக்கிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்கு வந்துள்ளேன். நிச்சயமாக எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி பதில் கொடுத்து வருகிறேன். கட்டாயமாக தப்பு செய்தவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சூரி. மேலும் சூரி தன்னிடம் பண மோசடி செய்ததற்காக புகார் அளித்துள்ள முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.