ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்டமான இயக்குனர்கள் பெயர் எடுத்தவர்கள் இயக்குனர் ஷங்கரும், ராஜமவுலியும். சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கரே, ராஜமவுலியை 'மகா ராஜமவுலி' என்று பாராட்டியிருந்தார்.. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா என்கிற பான் இந்தியா படத்தை இயக்கிய சுகுமாரும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு தற்போது இயக்குனர் ராஜமவுலி. குறித்த பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் சுகுமார் இதுபற்றி கூறும்போது, “நாங்கள் எல்லோரும் உங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் கூட உங்களை தொடுவதற்கு ஒட வேண்டியிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஆகாயத்தில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடியே உங்களை அண்ணாந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “புஷ்பா படத்தை நான் பான் இந்தியா படமாக உருவாக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராஜமவுலி அதை திட்டமிட்டே பான் இந்தியா படமாக உருவாக்கியுள்ளார். அவருக்கும் எங்களுக்கும் ஒரே வித்தியாசம் தான் இருக்கிறது. அவர் இதுபோன்ற பிரமாண்ட படைப்புகளை உருவாக்குவார் எங்களால் அவற்றை பார்க்க மட்டும் தான் முடியும்” என்று கூறியுள்ளார்