Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆபாச மெசேஜ் : ஆடை வடிவமைப்பாளர் மகன் மீது சஞ்சனா கல்ராணி புகார்

05 மார், 2022 - 19:00 IST
எழுத்தின் அளவு:
Sanjjanaa-galrani-complaint-against-fashion-designer-son-for-sending-obscene-messages-to-her

கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. டாக்டர் ஒருவரை ரகசிய திருமணம் செய்த சஞ்சனா கல்ராணி தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் கன்னட சினிமாவின் பிரபல ஆடை அலங்கார நிபுணர் பிரசாத் பிட்டப்பாவின் மகன் ஆடம் பிட்டப்பா தனக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்கள் அனுப்புவதாக பெங்களூரு இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் ஆடம் பிட்டப்பாவை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சஞ்சனா கல்ராணி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் அவர் (ஆடம் பிட்டப்பா) எனக்கு அந்த செய்திகளை அனுப்பியபோது முற்றிலும் குடிபோதையில் இருந்தார். இந்தச் செய்திகள் தவறானவை, மிருகத்தனமானவை, அருவருப்பானவை, மலிவானவை, புண்படுத்தக்கூடியவை, மிக மிக அவமதிப்பவை, மேலும் கடந்த வாரத்தில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.

உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன், மேலும் என் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் எதிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் நான் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு வேறு வழியின்றி இழுக்கப்படுகிறேன்.

நான் யாருடைய வாழ்க்கையிலும் ஊடுருவப் போவதில்லை, ஆனால் யாரேனும் இந்த மாதிரியான கவனச்சிதறலை என் வாழ்க்கையில் ஏற்படுத்தினால் தப்பிக்க முடியாது, சட்டரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த ஆதாரமும் இல்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் அவதூறு செய்யும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சஞ்சனா கல்ராணி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யகிறாரா...? - உண்மை என்னஇசையமைப்பாளர் இமான் மறுமணம் ... பிரபாஸ் உடன் மோதும் சூர்யா பிரபாஸ் உடன் மோதும் சூர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in