அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? |

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது புதிய வீட்டிற்கு இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், நடிகர் உதயநிதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது புதிய வீட்டில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் .