கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் |

நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பா.ரஞ்சித். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மகான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் விக்ரமை இயக்கும் படத்தை தொடரப் போகிறார் பா.ரஞ்சித். ஆனால் இந்த படத்தின் கதையை கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே விக்ரம் இடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பா.ரஞ்சித். ஆனால் அதையடுத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் விக்ரமை இயக்குவதை அப்போது தள்ளி வைத்திருக்கிறார். அதன் காரணமாக எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்கனவே விக்ரம் இடத்தில் சொன்ன அந்த கதையை படமாக்க தயாராகி வருகிறார் பா. ரஞ்சித்.