ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமான ஜனனி அய்யரை அடையாளம் காட்டியது பாலா இயக்கிய 'அவன் இவன்'. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பின்பு மலையாளத்துக்கு சென்றார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர் அதே கண்கள், பலூன் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விதி மதி உல்டா படத்தில் நடித்தார் . இந்த படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
ஜனனி நடித்துள்ள கசட தபற, தொல்லைக்காட்சி, வேஷம், பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் சில படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. சில பாதியில் நிற்கிறது. இந்த நிலையில கூர்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறர்.
பிரையன் பி ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில் ராஜாஜி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்க, சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு த்ரில்லர் வகை படமாகும்.