ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த வேலு நாச்சியார். ஜான்சி ராணிக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆங்கிலேயர்களின் சதியால் கணவனை இழந்த பிறகு தனியாக படை திரட்டி கொரில்லா போர் மூலம் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து இழந்த ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றியவர்.
வேலு நாச்சியாரின் 292வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக இது சிறு செய்தியாக கடந்து விடும். நேற்றைய பிறந்த நாள் கவனம் பெற்றது. இதற்கு காரணம் பிரதமர் மோடி வாழ்த்து சொன்னதுதான். அவர் தனது வாழ்த்து செய்தியில் "வேலு நாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறையினருக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரது ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வேலு நாச்சியாரின் வாழ்க்கையை சினிமாவாக இயக்கப்போவதாக சுசி.கணேசன் அறிவித்துள்ளார். இவர் பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம். என்கிறார்.