என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

கொரோனா தாக்கம் காரணமாக சில பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட துவங்கினர். ஆனால் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சில படங்கள் தியேட்டரில் வெளியானால் தான் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாகும் என தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்தன.
அப்படி மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி, கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரான மரைக்கார் படத்தையும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார். அதனால் தான் மிகப்பெரிய விலை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் முன்வந்தும் கூட அதை மறுத்துவிட்டார்.