பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். கோவை மாவட்டம், காசிகவுண்டன் புதூர் தான் இவரது சொந்த ஊர். 1941ம் ஆண்டு அக்., 27ல் ராக்கிய கவுண்டர் - பழனியம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் பழனிசாமி. சிறந்த ஓவியரான இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை வந்து நடிகர் சிவகுமாராக 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, ஓவியம், இலக்கியம், பேச்சாளர் என பன்முக திறமையால் இன்று தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயனாக திகழ்கிறார். இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடும் இவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
![]() |
1965ல் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‛காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சிவகுமாருக்கு 1970களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்தார்.
![]() |
‛‛அக்னி சாட்சி மற்றும் "சிந்து பைரவி" போன்றவை அடங்கும். இயக்குநர் எம்.பாஸ்கர், கே.ரங்கராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என்று அன்றைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
![]() |
திரைப்பட நாயகனாக மட்டுமின்றி இவர் நல்ல ஓவியர் என்பதற்கு இவருடைய பல ஓவியங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்றவை உதாரணங்களாக கூறலாம்.
![]() |
எழுத்துப் பணியிலும் இவருக்கு ஆர்வம் உண்டு என்பதற்கு இவர் எழுதிய "நான் ராஜபாட்டை அல்ல" என்ற புத்தகத்தை கூறலாம். இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 80 வயதிலும் யோகாவில் அசத்தும் சிவகுமார் கடந்தாண்டு கொரோனா காலக்கட்டத்தில் மூச்சுபயிற்சி தொடர்பாக ஆலோசனை கூறி பலருக்கும் உதவி செய்தார். சிவகுமார் சிறந்த பேச்சாளர். பல மேடைகளில் இவரது பேச்சுக்கள் மற்றவர்களுக்கு உந்துதலாக அமைந்தது என்றால் மிகையல்ல. தொடர்ந்து 2.15 மணிநேரம் எந்தவித இடைவெளியின்றி மகாபாரதம் இதிகாச புராணத்தை பேசி அசத்தியவர்.
![]() |
எந்த ஒரு துறையிலும் தீய வழியில் செல்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு. சினிமா துறையில் அது அதிகம். அப்படிப்பட்ட துறையில் ஒரு மனிதர் இப்போது வரை எந்தவித ஒழுக்ககேடுமின்றி இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சிவகுமார். தன்னுடைய பிள்ளைகளையும் அப்படியே கொண்டு வந்துள்ளார்.
![]() |