நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் |

இந்தியில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் என நட்சத்திர பட்டாளத்துடன் நடிகர் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. புராணக்கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 2003ல் வெளியான கார்கில் படத்திற்கு பிறகு நாகர்ஜுனா இந்தியில் நடித்துள்ள படம் இது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தனக்கு ரொம்பவே ஏமாற்றம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா. காரணம் இந்தப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கப்போகும் ஆசையில் இருந்தாராம். ஆனால் இருவர் நடித்த காட்சிகளையும் தனித்தனியாகவே படமாக்கினார்களாம்.. அதனால் ஒரு காட்சியில் கூட அமிதாப்புடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் நாகர்ஜுனா. இருவரும் தனித்தனியாக நடித்த காட்சிகளை விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக ஒன்றிணைத்துக்கொள்ள இருக்கிறார்களாம்.