கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கடந்த 2019-ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது எம்புரான் என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். படம் ஓரளவு நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் தேவையில்லாத மத சர்ச்சைகளில் சிக்கியதுடன் இன்னொரு பக்கம் முதல் பாகம் போல இல்லையே என்கிற விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார் பிரித்விராஜ். இரண்டாம் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்திற்கு அஸ்ரேல் என டைட்டில் வைக்கப்படலாம் என இந்த படத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்புரான் படத்தின் கிளைமாக்ஸில் உஷா உதூப் குரலில் இடம் பெற்ற பாடலில் இந்த அஸ்ரேல் என்கிற வார்த்தை இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி மூன்றாம் பாகத்திற்கு இது பொருத்தமான டைட்டிலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.